செய்திகள்

ஓசூர் பகுதியில் செல்லக்குமார் எம்பி - சத்யா எம்எல்ஏ பொதுமக்களுக்கு நன்றி அறிவிப்பு

Published On 2019-06-26 14:44 GMT   |   Update On 2019-06-26 14:44 GMT
பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற செல்லக்குமார் எம்பி - சத்யா எம்எல்ஏ ஆகியோர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செல்லக்குமார் எம்.பி. மற்றும் ஓசூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. நகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா எம்.எல்.ஏ. ஆகியோர் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சியின்போது, ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் இருந்து தொடங்கி காந்தி சிலை, ஏரித்தெரு, ரெயில்நிலைய சாலை, தாலுக்கா அலுவலக சாலை, பாகலூர் ஹட்கோ, பஸ்தி உள்ளிட்ட பகுதிகளிலும், மத்திகிரி முதுகானப்பள்ளி, பாரந்தூர், கொத்தகொண்டபள்ளி, அந்திவாடி மற்றும் ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாகலூர், பேரிகை, முகுலபள்ளி, நல்லூர், கக்கனூர், பேகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரம், கண்டபள்ளி, ஜுஜுவாடி, பத்தலபள்ளி, பேரண்ட பள்ளி, உள்ளிட்ட பகுதிகளுக்கும் நேரில்சென்று வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில், மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், ஓசூர் நகர பொருளாளர் சென்னீரப்பா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆனந்த், கட்சி பிரமுகர் வெங்கடேஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News