செய்திகள்
புதுவையில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
புதுவையில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்து வருகிறது. இதனால் வடக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் உருளையன் பேட்டை போலீசார் கடலூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக 2 பேர் வந்தனர்.
அவர்களை பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிள் திருடர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் விக்கிரவாண்டிய சேர்ந்த ராஜ்குமார் (வயது 21), பானி பூரி கடை நடத்தி வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (22). மோட்டார் சைக்கிள் மெக்கானிக் என்பது தெரியவந்தது. உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 6 மோட்டார் சைக்கிளும், பெரிய கடை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் 3 மோட்டார் சைக்கிள் திருடியதை ஒத்துக் கொண்டனர்.
அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் மீட்டு அவர்களை கைது செய்தனர்.