செய்திகள்

செங்கோட்டை அருகே விபத்தில் 2 பேர் படுகாயம்

Published On 2019-06-26 12:25 GMT   |   Update On 2019-06-26 12:25 GMT
செங்கோட்டை அருகே விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கோட்டை:

சிவகாசி அருகே உள்ள விசுவநத்தம் கணேசன் காலனியை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் மணிகண்டன் (வயது 26). இவர் குற்றாலத்தில் குடும்பத்துடன் குளித்து விட்டு காரில் வந்தவர் சாப்பிடுவதற்காக செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் ஒரு ஓட்டல் அருகில் காரை நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் சென்று விட்டார். அப்போது தென்காசியில் இருந்து செங்கோட்டை செல்வதற்காக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நின்ற கார் பின்னால் நிலை தடுமாறி வேகமாக மோதியது.

மோட்டார் சைக்கிளில் வந்த பிரானூர் பார்டர் வாய்க்கால் பாலத்தை சேர்ந்த முருகன் மகன் சுபாஷ் (20), பழனி மகன் இருதயராஜ் (21) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். பின்பு 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து செங்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Tags:    

Similar News