செய்திகள்
ஏர்வாடி அருகே தூக்கு போட்டு முதியவர் தற்கொலை
ஏர்வாடி அருகே தூக்கு போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
ஏர்வாடியை சேர்ந்தவர் ஜமால் முகைதீன் (வயது73). இவருக்கு முதுமை காரணமாக கண் தெரியவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜமால் முகைதீன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாததால் படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.