செய்திகள்

மானியக் கோரிக்கை விவாதம்- அதிமுக எம்எல்ஏக்கள் 28-ம் தேதி ஆலோசனை

Published On 2019-06-26 08:31 GMT   |   Update On 2019-06-26 08:31 GMT
மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடர்பாக வரும் 28-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
சென்னை:

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர், நாளை மறுநாள் தொடங்கி ஜூலை 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் நடைபெறும் மானியக் கோரிக்கையின்போது, துறை சார்ந்த புதிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு, புதிய சட்ட மசோதாக்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிப்புகளாக வெளியிடப்படும்.

இந்நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் (ஜூன் 28) நடைபெற உள்ளது.



இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 28-ம் தேதி காலை 11.30 மணிக்கு எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும், இதில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News