செய்திகள்

நாமகிரிப்பேட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை

Published On 2019-06-25 18:10 GMT   |   Update On 2019-06-25 18:10 GMT
நாமகிரிப்பேட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் திட்டியதால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை போலீஸ் சரகம் வெள்ளக்கல்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அரசு மதுபான கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் கவுசல்யா (வயது 15). இவர் நாமகிரிப்பேட்டை அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கவுசல்யாவை அவரது பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த கவுசல்யா நேற்று முன்தினம் பகலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கவுசல்யாவை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுசல்யா பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோர் திட்டியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News