செய்திகள்

காலாப்பட்டு அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2019-06-25 09:02 GMT   |   Update On 2019-06-25 09:02 GMT
காலாப்பட்டு அருகே விவாகரத்து பெற்ற பின்னர் மனைவியுடன் சேர்ந்து வாழ வற்புறுத்தியதால் விரக்தி அடைந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேதராப்பட்டு:

காலாப்பட்டு அருகே தமிழக பகுதியான கழுப்பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் அசோக்குமார் (வயது 33). இவர் காலாப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும், பிள்ளைச்சாவடியை சேர்ந்த ஆறுமுகம் மகள் ஜெயலட்சுமிக்கும், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் கோர்ட்டில் விவாகரத்தும் பெற்றனர்.

இந்த நிலையில் இரு வீட்டார் உறவினர்களும் மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு அசோக்குமாரிடம் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அசோக்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

நேற்று அவர் கிருமாம்பாக்கத்தில் உள்ள வயல் வெளியில் உள்ள வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அசோக்குமாரின் தந்தை ராமதாஸ் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News