செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்வு

Published On 2019-06-25 06:25 GMT   |   Update On 2019-06-25 06:25 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.344 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.26,464-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 22-ந் தேதி ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்தை கடந்தது. அன்று ஒரு பவுன் ரூ26 ஆயிரத்து 72 ஆக இருந்தது. அதன்பின்னர் விலை தொடர்ந்து அதிகரித்தது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.344 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்து 464ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.43 அதிகரித்து ரூ.3,308-க்கு விற்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.100 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 400 ஆகவும், ஒரு கிராம் ரூ.41.40 ஆகவும் உள்ளது.
Tags:    

Similar News