செய்திகள்
திருவள்ளூரில் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி- போலீசார் விசாரணை
திருவள்ளூரில் தனியார் நிதி நிறுவனத்தில் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர், ஜெ.என். சாலையில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இன்று காலை ஊழியர்கள் வந்த போது ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் நிதி நிறுவனத்தின் லாக்கரை உடைக்க முடியாததால் அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவை திருடி சென்று விட்டனர். இதனால் லாக்கரில் இருந்த பணம் தப்பியது.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
கொள்ளையர்கள் தொடர்ந்து நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்று வருவது திருவள்ளூர் போலீசாருக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர், ஜெ.என். சாலையில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இன்று காலை ஊழியர்கள் வந்த போது ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் நிதி நிறுவனத்தின் லாக்கரை உடைக்க முடியாததால் அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவை திருடி சென்று விட்டனர். இதனால் லாக்கரில் இருந்த பணம் தப்பியது.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
கொள்ளையர்கள் தொடர்ந்து நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்று வருவது திருவள்ளூர் போலீசாருக்கு சவாலை ஏற்படுத்தியுள்ளது.