செய்திகள்

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது

Published On 2019-06-25 05:08 GMT   |   Update On 2019-06-25 05:08 GMT
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கியது.
சென்னை: 

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 

அதன்படி, தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நேரடி கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு இன்று முதல் வரும் 27- தேதிவரை 3 நாட்கள் நடைபெறுகிறது. 

இன்று மாற்றுத்திறனாளிகளுக்கும், நாளை ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும், 27-ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி முதல் ஆன்லைன் கலந்தாய்வு முறையில் நடத்தப்பட உள்ளது.

தொழிற்கல்வி பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு நாளை முதல் 28-ம் தேதிவரை நடைபெற உள்ளது.  
Tags:    

Similar News