செய்திகள்
பாளையில் மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
பாளையில் மணல் கடத்திய 3 பேரை கைது செய்த 3 லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளையில் உள்ள பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார், டக்கரம்மாள்புரம் அருகே வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது 3 டிப்பர் லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தது. லாரியை மறித்து சோதனை செய்த போது, அனுமதி இல்லாமல் மணல் கடத்தியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் 3 லாரிகளையும் பறிமுதல் செய்து வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
லாரி டிரைவர்களான சுப்பிரமணியபுரம் விசுவநாதன் (வயது41), கோபால சமுத்திரம் செல்லப்பா (29), கிருஷ்ணாபுரம் நொச்சிகுளம் மாரியப்பன் (24) ஆகிய 3 பேர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மணல் எங்கிருந்து எடுத்து கடத்தப்படுகிறது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாளையில் உள்ள பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார், டக்கரம்மாள்புரம் அருகே வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது 3 டிப்பர் லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தது. லாரியை மறித்து சோதனை செய்த போது, அனுமதி இல்லாமல் மணல் கடத்தியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் 3 லாரிகளையும் பறிமுதல் செய்து வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
லாரி டிரைவர்களான சுப்பிரமணியபுரம் விசுவநாதன் (வயது41), கோபால சமுத்திரம் செல்லப்பா (29), கிருஷ்ணாபுரம் நொச்சிகுளம் மாரியப்பன் (24) ஆகிய 3 பேர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மணல் எங்கிருந்து எடுத்து கடத்தப்படுகிறது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.