செய்திகள்

அதிமுக அரசை கண்டித்து பெரம்பலூரில் திமுக ஆர்ப்பாட்டம்

Published On 2019-06-24 11:18 GMT   |   Update On 2019-06-24 11:18 GMT
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, மதியழகன், கிருஷ்ணமூர்த்தி, நல்லதம்பி, சோமுமதியழகன், ராஜேந்திரன், பேரூர் செயலாளர்கள் ரவிச்சந்திரன், சேகர், வெங்கடேசன், ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மாவட்ட நிர்வாகிகள் நடராஜன், பாஸ்கர், ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகுந்தன்,ஜெகதீஸ்வரன், சிவக்குமார், மாவட்ட அணி பொறுப்பாளர்கள் ஹரிபாஸ்கர், தங்கராசு, முருகேசன், மகாதேவி, வக்கீல் செந்தில்நாதன், சன்சம்பத் உட்பட கலந்து கொண்டனர். முன்னதாக நகர செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் அப்துல் பாரூக் நன்றி கூறினார்.
Tags:    

Similar News