கழுகுமலை அருகே குடும்ப தகராறில் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சண்முகராஜ் (வயது 28 ). இவர் கயத்தாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மீனாட்சி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
சண்முகராஜூக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த சண்முகராஜ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த கழுகுமலை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவரது தந்தை கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.