செய்திகள்

லாஸ்பேட்டையில் கடன் தொல்லையால் பெண் தற்கொலை

Published On 2019-06-24 10:36 GMT   |   Update On 2019-06-24 10:36 GMT
லாஸ்பேட்டையில் கடன் தொல்லையால் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

லாஸ்பேட்டை அசோக் நகர் நேதாஜி வீதியை சேர்ந்தவர் காந்திதாசன்சதா. இவரது மனைவி ஏஞ்சலின் (வயது48). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக காந்திதாசனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் ஏஞ்சலின் புதுவையில் உள்ள ஒரு பியூட்டி பார்லருக்கு வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார். ஆனாலும் அந்த வருமானம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லை. இதனால் குடும்ப செலவுக்கு பலரிடம் ஏஞ்சலின் பணம் கடன் வாங்கினார்.

ஆனால் அந்த பணத்தை ஏஞ்சலின் திருப்பி கொடுக்க முடியாமல் திண்டாடி வந்தார். இதற்கிடையே பணம் கடன் கொடுத்தவர்கள் திருப்பிகேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் மனமுடைந்த ஏஞ்சலின் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஏஞ்சலின் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை புறக்காவல் போலீஸ் ஏட்டு மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News