செய்திகள்
கோட்டக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் காய்கறி வியாபாரி பலி
கோட்டக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் காய்கறி வியாபாரி தலைநசுங்கி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதராப்பட்டு:
மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன் (வயது30). இவர் கோட்டக்குப்பம் இந்தியன்வங்கி எதிரே காய்கறி நடத்தி வந்தார். நேற்று மாலை கதிரவன் வீட்டுக்கு சென்று விட்டு இரவு காய்கறி கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
சின்னமுதலியார்சாவடி மதுவிலக்கு சோதனைச்சாவடி அருகே வந்த போது புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே கதிரவன் தலை நசுங்கி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கார் மோதி பலியான கதிரவனுக்கு திருமணமாகி வித்யா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது வித்யா கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன் (வயது30). இவர் கோட்டக்குப்பம் இந்தியன்வங்கி எதிரே காய்கறி நடத்தி வந்தார். நேற்று மாலை கதிரவன் வீட்டுக்கு சென்று விட்டு இரவு காய்கறி கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
சின்னமுதலியார்சாவடி மதுவிலக்கு சோதனைச்சாவடி அருகே வந்த போது புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே கதிரவன் தலை நசுங்கி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கார் மோதி பலியான கதிரவனுக்கு திருமணமாகி வித்யா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது வித்யா கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.