செய்திகள்
தக்கலை அருகே கல்லூரி மாணவி திடீர் மாயம்
தக்கலை அருகே கல்லூரி மாணவி திடீரென மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை:
தக்கலையை அடுத்த துரப்பு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். பால்ராஜின் மகள் உஷா (வயது 22). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிவிடுவார்.
கடந்த 22-ந் தேதி உஷா வழக்கம் போல வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றார். அன்று மாலை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர்.
எங்கு தேடியும் உஷாவை காணவில்லை. எனவே உஷாவின் தாயார் ருக்குமணி இது பற்றி தக்கலை போலீசில் புகார் செய்தார். அதில் கல்லூரிக்கு சென்ற மாணவி உஷாவை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தரவேண்டும் எனக்கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான உஷாவை தேடி வருகிறார்கள்.
தக்கலையை அடுத்த துரப்பு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். பால்ராஜின் மகள் உஷா (வயது 22). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிவிடுவார்.
கடந்த 22-ந் தேதி உஷா வழக்கம் போல வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றார். அன்று மாலை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர்.
எங்கு தேடியும் உஷாவை காணவில்லை. எனவே உஷாவின் தாயார் ருக்குமணி இது பற்றி தக்கலை போலீசில் புகார் செய்தார். அதில் கல்லூரிக்கு சென்ற மாணவி உஷாவை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தரவேண்டும் எனக்கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான உஷாவை தேடி வருகிறார்கள்.