செய்திகள்
குடவாசல் அருகே பாம்பு கடித்து இளம்பெண் உயிரிழப்பு
குடவாசல் அருகே பாம்பு கடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூர்:
குடவாசல் அருகே பருத்தியூரை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் ரேவதி (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவரின் பருத்தி வயலில் வேலை செய்தபோது அங்கு பதுங்கி இருந்த விஷ பாம்பு ரேவதியை கடித்தது. அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ரேவதி பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி வடிவேல் குடவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடவாசல் அருகே பருத்தியூரை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் ரேவதி (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவரின் பருத்தி வயலில் வேலை செய்தபோது அங்கு பதுங்கி இருந்த விஷ பாம்பு ரேவதியை கடித்தது. அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ரேவதி பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி வடிவேல் குடவாசல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.