செய்திகள்
பாகூர் அருகே குடிபோதையில் தண்ணீர் தொட்டியில் தூங்கிய தொழிலாளி தவறிவிழுந்து பலி
பாகூர் அருகே குடிபோதையில் தண்ணீர் தொட்டியில் தூங்கிய தொழிலாளி தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி பலியானார்.
பாகூர்:
கிருமாம்பாக்கம் அருகே சார்காசிமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார் (வயது44), கூலித்தொழிலாளி. இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
அய்யனார் கடந்த 3 ஆண்டுகளாக பாகூர் அருகே குடியிருப்புபாளையம் சுப்பையா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அய்யனாருக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்று அய்யனார் மதுகுடித்துவிட்டு அங்குள்ள குடிநீர் தேக்க தொட்டியில் சிமெண்டு கட்டையில் படுத்து தூங்கினார்.
அப்போது குடிபோதையில் அய்யனார் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர் போலீசார் விரைந்து சென்று அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருமாம்பாக்கம் அருகே சார்காசிமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார் (வயது44), கூலித்தொழிலாளி. இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
அய்யனார் கடந்த 3 ஆண்டுகளாக பாகூர் அருகே குடியிருப்புபாளையம் சுப்பையா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அய்யனாருக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்று அய்யனார் மதுகுடித்துவிட்டு அங்குள்ள குடிநீர் தேக்க தொட்டியில் சிமெண்டு கட்டையில் படுத்து தூங்கினார்.
அப்போது குடிபோதையில் அய்யனார் தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர் போலீசார் விரைந்து சென்று அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.