செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே காதலித்து திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2019-06-20 15:09 GMT   |   Update On 2019-06-20 15:09 GMT
பாப்பிரெட்டிப்பட்டி அருகே குடும்ப தகராறில் எலிமருந்தை சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள திருமல்வாடி பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன். கட்டிட தொழிலாளியான இவரது மனைவி அன்புசெல்வி (வயது18). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அன்புசெல்வி வீட்டில் இருந்த எலிமருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். 

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News