செய்திகள்

ஆஸ்பத்திரியில் 2-வது நாளாக எடப்பாடி பழனிசாமிக்கு இன்று சிகிச்சை

Published On 2019-06-20 10:51 GMT   |   Update On 2019-06-20 10:51 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் இன்று 2-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு 2 மணி நேரம் மருத்துவ பரிசோதனை நடந்தது. அதன் பிறகு வீடு திரும்பினார்.

இந்த நிலையில் இன்று அவர் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று 2-வது நாளாக சிகிச்சை பெற்றார். அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
Tags:    

Similar News