செய்திகள்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரியில் மணல் கடத்தல்

Published On 2019-06-20 09:26 GMT   |   Update On 2019-06-20 09:26 GMT
ஆந்திராவில் இருந்து உரிய அனுமதி இன்றி சென்னையின் புறநகர் பகுதிக்கு மணல் கடத்தி வந்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் மாவட்ட மணல் கடத்தல் தடுப்பு பிரிவுசிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.

அந்த லாரியில் ஆந்திராவில் இருந்து உரிய அனுமதி இன்றி சென்னையின் புறநகர் பகுதிக்கு மணல் கடத்தி வந்தது தெரிந்தது. அப்போது லாரி டிரைவர் ஆந்திராவைச் சேர்ந்த ஜெகன் என்பவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News