செய்திகள்

ஆரல்வாய்மொழி அருகே மலைப்பாம்பு பிடிபட்டது

Published On 2019-06-20 03:44 GMT   |   Update On 2019-06-20 03:44 GMT
ஆரல்வாய்மொழி அருகே சமீபத்தில் பெய்த மழையினால் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு புதருக்குள் சிக்கி நகர முடியாமல் தவித்த மலைப்பாம்பை மீட்ட வனத்துறை அதிகாரிகள் அதனை வனப்பகுதியில் விட்டனர்.
ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி புத்தனாறு கால்வாயில் சமீபத்தில் பெய்த மழையினால் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு புதருக்குள் சிக்கி நகர முடியாமல் தவித்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவர்கள் மலைப்பாம்பை பிடித்து, ஆரல்வாய்மொழி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அது சுமார் 10 அடி நீளம் உடையது. பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.

Tags:    

Similar News