செய்திகள்

சிறுமியிடம் சில்மி‌ஷம்- வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

Published On 2019-06-19 09:55 GMT   |   Update On 2019-06-19 09:55 GMT
ஆனைமலையில் சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி:

ஆனைமலை பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது பக்கத்து வீட்டைசேர்ந்த சண்முகசுந்தரம் (18) என்ற வாலிபர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் முன்பு விளையாடிய சிறுமியை செல்போனில் வீடியோ கேம் போட்டு தருவதாக கூறி அழைத்து சென்று சில்மி‌ஷம் செய்தார். 

இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறினார். இதையடுத்து ஆனைமலை போலீசார் போக்சோ சட்டத்தில் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.

Tags:    

Similar News