செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம்- வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
ஆனைமலையில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி:
ஆனைமலை பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது பக்கத்து வீட்டைசேர்ந்த சண்முகசுந்தரம் (18) என்ற வாலிபர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டின் முன்பு விளையாடிய சிறுமியை செல்போனில் வீடியோ கேம் போட்டு தருவதாக கூறி அழைத்து சென்று சில்மிஷம் செய்தார்.
இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறினார். இதையடுத்து ஆனைமலை போலீசார் போக்சோ சட்டத்தில் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.