செய்திகள்

மதுரையில் வீடு புகுந்து நகை கொள்ளை

Published On 2019-06-19 09:48 GMT   |   Update On 2019-06-19 09:48 GMT
மதுரையில் வீடு புகுந்து கொள்ளை, நகை பறிப்பு போன்றவை தொடர்கதையாக நடந்து வருகிறது.

மதுரை:

திருப்பரங்குன்றம் அருகில் உள்ள திருநகர் காசித் தெருவைச் சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 66). இவர் கடந்த 15-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பீரோவை உடைத்த அந்த கும்பல், அதில் இருந்த 6 பவுன் நகையை கொள்ளையடித்துச்சென்றது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அவனியாபுரம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் சிவராஜ் (29). இவர் சம்பவத்தன்று செம்பூரணி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வல்லானந்தபுரத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் (29), சிந்தாமணி காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குதிகால்வெட்டுமுருகன் (38) ஆகியோர் அரிவாளை காட்டி மிரட்டி, சிவராஜிடம் இருந்த ரூ. 800-ஐ பறித்துச் சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News