செய்திகள்

திருப்பூரில் நிதி நிறுவனத்தில் ரூ.42 லட்சம் மோசடி - மானேஜர் தலைமறைவு

Published On 2019-06-19 05:58 GMT   |   Update On 2019-06-19 05:58 GMT
திருப்பூரில் நிதி நிறுவனத்தில் ரூ.42 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மானேஜரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் பி.என்.ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாடிக்கையாளர்களிடம் மாதச்சீட்டு, வாரச்சீட்டு வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் மண்டல மேலாளர் சக்திவேல் திருப்பூருக்கு வந்து நிறுவனத்தில் திடீர் ஆய்வு மற்றும் தணிக்கையில் ஈடுபட்டார்.

அப்போது வாடிக்கையாளர்கள் செலுத்திய ரூ.42 லட்சம் வரவு வைக்காமல் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து நிதி நிறுவன மேலாளர் சுரேஷ்கண்ணன் (வயது 34) என்பவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் உரிய பதில் கூறவில்லை. திடீரென தலைமறைவானது தெரியவந்தது.

இதனையடுத்து மண்டல மேலாளர் திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதில் வாடிக்கையாளர்கள் செலுத்திய ரூ.42 லட்சம் பணத்தை வங்கி மேலாளர் சுரேஷ்கண்ணன் கையாடல் செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன மேலாளர் சுரேஷ்கண்ணனை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News