செய்திகள்
பாபநாசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் தவறி விழுந்து பலி
பாபநாசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாபநாசம்:
பாபநாசம் படுகை புதுத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 35). டைலர் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று பாபநாசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் படுகை திரும்பி வந்து கொண்டிருந்தார். அவர் பாபநாசம் கபிஸ்தலம் மெயின் ரோட்டில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டு பாஸ்கர் பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார்.
இதுகுறித்து அவரது உறவினர் மதியழகன் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.