பெரியகுளத்தில் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளையடித்த கும்பல்
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் பாரதிநகரை சேர்ந்தவர் ஆசின் (வயது45). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனது குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் இவரது வீட்டுக்குள் புகுந்து 2 பவுன் தங்க நகைகள், ரூ.42,500 ரொக்க பணம், டேப்லட் ஆகியவற்றை திருடிச் சென்றனர். காலையில் எழுந்து பார்த்த ஆசின் வீட்டில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல் உத்தமபாளையம் அருகில் உள்ள அனுமந்தன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூமாலை. இவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவரது கடையில் புகுந்த நபர்கள் கல்லாவில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர். இது குறித்து பூமாலை உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் கடையில் திருடிய அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், அஜித் உள்பட 3 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.