செய்திகள்

மாநகராட்சியாகிறது ஆவடி- தமிழக அரசு அரசாணை வெளியீடு

Published On 2019-06-18 09:34 GMT   |   Update On 2019-06-18 09:34 GMT
தமிழகத்தின் 15-வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், ஒசூர், ஆகிய 14 மாநகராட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 15-வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நகராட்சியாக இருந்த ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவடி, பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்பட நகராட்சிகள் இணைக்கப்பட்டு ஆவடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News