செய்திகள்

வடபழனியில் வீடு புகுந்து நகை திருட்டு - கொள்ளையன் கைது

Published On 2019-06-18 08:46 GMT   |   Update On 2019-06-18 08:46 GMT
வடபழனியில் வீடு புகுந்து நகை திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

வடபழனி மசூதி தெருவை சேர்ந்தவர் பஷீர் (31). தனியார் நிறுவன ஊழியர் நேற்று காலை இவர் வேலைக்கு சென்று விட்டார். மனைவி வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்று விட்டார். இதை அறிந்த மர்மநபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 3½ பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றான்.

இதுபற்றிய புகாரின் பேரில் வடபழனி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் வடபழனி 100அடி ரோட்டில் சுற்றித் திரிந்த மணிகண்டன் என்கிற குண்டு மணி (21) என்பவனை கைது செய்தனர். இவனிடம் இருந்து 2½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இவன் எம்.ஜி.ஆர்.நகர் அங்காள பரமேஸ்வரி கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர்.

Tags:    

Similar News