செய்திகள்

பேராசிரியர் அய்யாசாமி மறைவு - மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published On 2019-06-17 07:07 GMT   |   Update On 2019-06-17 07:07 GMT
பேராசிரியர் அய்யாசாமி மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கிய மாணவராகக் கல்வி பயின்ற காலத்திலிருந்தே, திராவிட இயக்கச் சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தவரும், திராவிட இயக்கத்தின் லட்சியங்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான பேராசிரியர் அய்யாசாமி உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற துயரச்செய்தி கேட்டு வேதனையடைந்தேன். அவரது மறைவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேராசிரியர் அய்யாசாமி கலைஞர் மீது மாறாப்பற்றும் கலைஞர் இவர் மீதும் நீங்காப் பாசமும் வைத்திருந்ததை நான் அறிவேன். திராவிட இயக்கத்திற்குப் பேரிழப்பை ஏற்படுத்தி இருக்கும் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிட இயக்கத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News