செய்திகள்

புதன்சந்தை பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

Published On 2019-06-15 18:19 GMT   |   Update On 2019-06-15 18:19 GMT
மின்சார பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் புதன்சந்தை பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மின்சார பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துப்பாளையம், ஏளூர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, வேலகவுண்டம்பாளையம், களங்காணி மற்றும் காரைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட இருப்பதாக நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News