செய்திகள்

காதல் திருமணம் செய்த 7 மாதத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

Published On 2019-06-14 12:03 GMT   |   Update On 2019-06-14 12:03 GMT
பீளமேடு அருகே காதல் திருமணம் செய்த 7 மாதத்தில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை பீளமேடு அருகே உள்ள கோல்டுவின்சை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சசிகலா என்ற பெண்ணை பெற்றோர் சம்மதம் இல்லாமல் காதலித்து திருமணம் செய்து இருந்தார். 2 பேரும் ஒன்றாக கோல்டு வின்ஸ் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

இந்த காதல் திருமண விவகாரம் நவீன்குமாரின் தாய்க்கு தெரிய வரவே அவர் அடிக்கடி போன் சென்று நவீன்குமாரை கண்டித்தார். இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்டு நவீன்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News