செய்திகள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

Published On 2019-06-13 03:29 GMT   |   Update On 2019-06-13 03:29 GMT
2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு வருகிற 24-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை:

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. ஏற்கனவே கடந்த 2017-ம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதன்பிறகு, தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 2,144 பணியிடங்களுக்கு வருகிற 24-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி ஆகும்.

தேர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250-ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும். டி.டி., அஞ்சல் வழியாக பணம் செலுத்துதல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

முக்கிய பாடப்பிரிவுகளில் 110 மதிப்பெண்ணுக்கும், கல்வி முறை பிரிவில் 30 மதிப்பெண்ணுக்கும், பொது அறிவு பிரிவில் 10 மதிப்பெண்ணுக்கும் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது.

மேலும் விண்ணப்பிப்பது எப்படி? என்னென்ன தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்? என்பது தொடர்பான விவரங்களை http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளலாம். 
Tags:    

Similar News