செய்திகள்
தமிழகம், புதுவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்- நாராயணசாமி பேட்டி
புதுவை, தமிழகத்தில் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் வெங்கட சுப்பா ரெட்டியாரின் நினைவு தின நிகழ்ச்சி மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நீட் தேர்வு தோல்வியால் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை, தமிழகத்தில் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.