செய்திகள்
வில்லியனூரில் மகன் சரியாக படிக்காததால் தாய் தற்கொலை
வில்லியனூரில் மகன் சரியாக படிக்காததால் தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர்:
வில்லியனூர் கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் நாமதேவ். மின்வாரிய ஊழியர். இவரது மனைவி லதா (வயது 40). இவர்களுக்கு ஸ்ரீதர் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
இதற்கிடையே தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்த ஸ்ரீதர் பிளஸ்-2வுக்கு தேர்வான நிலையில் சரியாக படிப்பதில்லை என கூறப்படுகிறது.
இதனால் நாமதேவுக்கும், அவரது மனைவி லதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். அப்போது மகனுக்கு ஆதரவாக லதா பேசுவது வழக்கம். அதுபோல் நேற்றும் இது தொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது லதாவை நாமதேவ் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் அறையில் மின் விசிறியில் அவர் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் லதாவை தூக்கில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே லதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு குப்புசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வில்லியனூர் கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் நாமதேவ். மின்வாரிய ஊழியர். இவரது மனைவி லதா (வயது 40). இவர்களுக்கு ஸ்ரீதர் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
இதற்கிடையே தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்த ஸ்ரீதர் பிளஸ்-2வுக்கு தேர்வான நிலையில் சரியாக படிப்பதில்லை என கூறப்படுகிறது.
இதனால் நாமதேவுக்கும், அவரது மனைவி லதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். அப்போது மகனுக்கு ஆதரவாக லதா பேசுவது வழக்கம். அதுபோல் நேற்றும் இது தொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது லதாவை நாமதேவ் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் அறையில் மின் விசிறியில் அவர் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் லதாவை தூக்கில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே லதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு குப்புசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.