மின் கட்டண உயர்வை கண்டித்து தவளக்குப்பத்தில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி:
புதுவை மாநிலம் அரியாங்குப்பம் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் புதுவை காங்கிரஸ் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் தவளக்குப்பத்தில் உள்ள மின் துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாரதீய ஜனதா மாநில துணை தலைவர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சக்திபாலன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், தங்க.விக்ரமன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மணவெளி தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், மாவட்ட தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், பிரகாஷ், அணி நிர்வாகிகள் மகேஷ் ரெட்டி, கோபி, வடிவேலு, தினகரன், தொகுதி பொதுச் செயலாளர்கள் சுகுமாறன், கலைவாணன்,
துணைத்தலைவர் சுரேஷ், விவசாய அணி பாரதி மோகன், வைரமுடி, திருவேங்கடம், சண்முகம், இளைஞர் அணி சிலம்பரசன், பிரபாகரன், மகளிர் அணி சுமதி, வள்ளி, வீரம்மாள், சாந்தி, செல்வி, ராஜேஸ்வரி, கவுசல்யா, பூரணாங்குப்பம் சண்முகம், எஸ்.சி., எஸ்.டி. மோர்சா திலீபன், வீரப்பன், தவளக்குப்பம் இளஞ்செழியன், மணவெளி தங்கதுரை, எடையார்பாளையம் அசோக் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.