செய்திகள்

மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து தொழிலாளி பலி

Published On 2019-05-21 12:31 GMT   |   Update On 2019-05-21 12:31 GMT
தவளக்குப்பத்தில் மனைவி பிரிந்து சென்ற வேதனையிலும், மகனும் இறந்து போனதாலும் கூலித்தொழிலாளி அளவுக்கு அதிகமாக மதுகுடித்து இறந்து போனார்.
பாகூர்:

தவளக்குப்பம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது40), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக இளங்கோவனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இதனால் இளங்கோவன் தனது மகனுடன் வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோவனின் மகனும் இறந்து போனார். ஏற்கனவே மனைவி பிரிந்து சென்ற வேதனையில் இருந்து வந்த இளங்கோவன் தனது ஒரே மகனும் இறந்து போனதால் சோகத்தில் அதிகமாக மதுகுடித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் இளங்கோவன் பிணமாக கிடந்தார். அக்கம்பக்கத்து வீட்டினர் இதனை பார்த்து தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குபதிவு செய்து இளங்கோவன் அளவுக்கு அதிகமாக மதுகுடித்ததால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News