செய்திகள்

மதகடிப்பட்டு அரசு பள்ளி வளாகத்தில் வாலிபர் மர்ம மரணம்

Published On 2019-05-20 11:57 GMT   |   Update On 2019-05-20 11:57 GMT
மதகடிப்பட்டு அரசு பள்ளி வளாகத்தில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

திருபுவனை:

திருபுவனை அருகே மதகடிப்பட்டு சந்தைதோப்பு அரசு பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி அருகில் 40 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த வாலிபர் கறுப்பு கலரில் ஜீன்ஸ் பேண்டும், பிங்க் கலரில் டீசர்ட்டும் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊர் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாபன், ஏட்டு ஜெயதேவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அந்த வாலிபர் யார்? எந்த ஊர் என்பது குறித்தும் குடிபோதையில் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News