செய்திகள்

ஆற்காடு அருகே லாரி மோதி சென்னை வாலிபர் பலி

Published On 2018-09-11 16:52 IST   |   Update On 2018-09-11 16:52:00 IST
ஆற்காடு அருகே லாரி மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:

சென்னை மேலவாக்கத்தை சேர்ந்தவர் எட்வின் இவரது மகன் ஐசக் ராஜேந்திரன் (வயது 27). பெங்களுருவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் இன்று காலை விடுமுறை காரணமாக சென்னைக்கு காரில் புறப்பட்டார். கார் ஆற்காடு அடுத்த வேப்பேரி அருகே சென்ற போது சாலையின் அருகே நின்றிருந்த லாரி மீது மோதியது.

இதில் ஐசக் ராஜேந்திரன் அதிர்ஷ்டவசமாக லேசான காயமுடன் உயிர் தப்பினார். பின்னர் காரில் இருந்து இறங்கி சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற மற்றொரு லாரி ஐசக் ராஜேந்திரன் மீது மோதியது. இதில் ஐசக் ராஜேந்திரன் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் உடலை மீட்டு ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News