உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

Published On 2022-08-10 10:13 GMT   |   Update On 2022-08-10 10:13 GMT
  • ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி தெரியாத அளவிற்கு பாறைகள் மூழ்கிய படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
  • ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 32-வது நாளாக தடை விதித்துள்ளது.

பென்னாகரம்,

கர்நாடகா மற்றும் கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழைபெய்து வருகிறது.

இதனால் கர்நாடக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த இரு அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்துவிட ப்பட்டுள்ளது.

இதனால் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இன்றுகாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி தெரியாத அளவிற்கு பாறைகள் மூழ்கிய படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 32-வது நாளாக தடை விதித்துள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பால் வருவாய்த்துறையினர், போலீசார் காவிரி கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News