செய்திகள்
வாக்குப்பதிவு (கோப்புப்படம்)

வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 92வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2021-04-17 01:45 GMT   |   Update On 2021-04-17 01:45 GMT
வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணிக்கு மறு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை:

வேளச்சேரி தொகுதியில் கடந்த 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்ற நாளில் 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், ஒரு வி.வி.பாட் எந்திரமும் மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதையடுத்து தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணையில் வி.வி.பாட் எந்திரம் வேளச்சேரி தொகுதியில் 92-வது வாக்குச்சாவடியில் 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வந்தது. 15 ஓட்டுகள் அதில் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 92-வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் 548 ஆண் வாக்களர்களுக்கான மறு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஆண் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணிவரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News