செய்திகள்
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கார் மீது மர்மநபர்கள் தாக்குதல்

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கார் மீது மர்மநபர்கள் தாக்குதல்

Published On 2021-04-06 11:04 GMT   |   Update On 2021-04-06 11:04 GMT
தேனி - போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாள் கவுண்டன்பட்டியில் எம்.பி. ரவீந்திரநாத் கார் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போடி:

தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேனி - போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாள் கவுண்டன்பட்டியில் எம்.பி. ரவீந்திரநாத் கார் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போடிநாயக்கனூர் தொகுதியில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவை பார்வையிட சென்ற தேனி எம்.பி‌யும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ரவீந்திரநாத் கூறுகையில், நான் சென்ற கார் மீது திமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர் என குற்றம்சாட்டியுள்ளார்.
Tags:    

Similar News