செய்திகள்
முத்தரசன்

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்களின் ஆதரவு உள்ளது- முத்தரசன் பேச்சு

Published On 2021-04-04 00:00 GMT   |   Update On 2021-04-04 00:00 GMT
தி.மு.க. கூட்டணிக்கு மக்களின் பேராதரவு இருப்பதை தமிழகம் முழுவதும் பார்க்க முடிகிறது என்று முத்தரசன் பேசியுள்ளார்.
மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் டி.ஆர்பி.ராஜா எம்.எல்.ஏ.வை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் மன்னார்குடி தொகுதிக்கு உட்பட்ட சவளக்காரன், பொதக்குடி, தேவங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணிக்கு மக்களின் பேராதரவு இருப்பதை தமிழகம் முழுவதும் பார்க்க முடிகிறது. அ.தி.மு.க அணியின் பல சக்கரங்கள் கழன்று விழுந்து விட்டதால் தற்போது அந்த அணி பலவீனமடைந்து உள்ளது.

வருமான வரித்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைக்கு பா.ஜனதா பயன்படுத்தி வருகிறது. நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரு தேர்தல் யுத்தம். நாட்டையும் அரசியலமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற தி.மு.க கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தோளில் பச்சை துண்டு அணிந்து கொண்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News