செய்திகள்
ஆ.ராசா, தயாநிதி மாறன், திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது வழக்குப்பதிவு
தேர்தல் பிரசாரத்தின் போது அவதூறாக பேசியதாக திமுக எம்.பிக்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தேர்தல் பிரசாரத்தின் போது அவதூறாக பேசியதாக திமுக எம்.பிக்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன், பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யதுள்ளனர். ஆபாசமாக திட்டுதல், கலகம் செய்ய தூண்டி விடுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.