செய்திகள்
காங்கிரஸ்

மின் இணைப்பை துண்டித்து அதிமுக பணப்பட்டுவாடா- தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

Published On 2021-04-03 08:45 GMT   |   Update On 2021-04-03 08:45 GMT
தமிழகம் முழுவதும் இரவில் மின் இணைப்பை துண்டித்து அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.

சென்னை:

தேர்தல் முறைகேடுகளை தடுக்க பறக்கும்படையினர் விடிய விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

அதையும் மீறி பணப்பட்டுவாடாவும் நடைபெறுவதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் சார்பில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இரவில் மின் இணைப்பை துண்டித்து அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்து வருவதாகவும், மின் இணைப்பை துண்டிக்க மின் வாரிய ஊழியர்கள் உடந்தையாக செயல்படுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News