செய்திகள்
வைகோ

மு.க.ஸ்டாலினை ஆதரித்து வைகோ 18-ந்தேதி பிரசாரம்

Published On 2021-03-14 05:11 GMT   |   Update On 2021-03-14 05:11 GMT
மறுமலர்ச்சி தி.மு.க. தேர்தல் அறிக்கையினை கழகப் பொதுச்செயலாளர் வைகோ வருகிற 17-ந்தேதி காலை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

ம.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற 17-ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு தலைமை நிலையம் தாயகத்தில், மறுமலர்ச்சி தி.மு.க. தேர்தல் அறிக்கையினை கழகப் பொதுச்செயலாளர் வைகோ வெளியிடுகிறார்.

நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்குக்கேட்டு தேர்தல் பிரசாரப் பயணத்தை வருகிற 18-ந்தேதி அன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடங்குகிறார்.

அன்று மாலை 5 மணிக்கு கொளத்தூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை ஆதரித்து கழகப் பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரசார கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News