செய்திகள்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

6 தொகுதிகளிலும் அதிமுகவுடன் மோதும் மதிமுக

Published On 2021-03-10 15:19 GMT   |   Update On 2021-03-10 15:19 GMT
மதிமுகவுக்கான தொகுதிகள் ஒதுக்கீட்டு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.
சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தவண்ணம் உள்ளன. அதன்படி, திமுக தொகுதியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் இன்று இறுதி செய்யப்பட்டன. அதன்படி மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர், சாத்தூர், பல்லடம், அரியலூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் மதிமுக போட்டியிடுகிறது. 

இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக சார்பில் மதுரை தெற்கு தொகுதியில் எஸ்.எஸ்.சரவணன் போட்டியிடுகிறார். வாசுதேவநல்லூரில் ஏ.மனோகரன், சாத்தூரில் ஆர்.கே.ரவிச்சந்திரன், பல்லடத்தில் எம்எஸ்எம் ஆனந்தன், அரியலூரில் தாமரை எஸ்.ராஜேந்திரன், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் போட்டியிடுகின்றனர்.
Tags:    

Similar News