செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை

Published On 2021-03-05 02:11 GMT   |   Update On 2021-03-05 04:16 GMT
அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்யவும், சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் தருவது குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை நடத்தினர்.
சென்னை:

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 8 ஆயிரத்து 200 பேர் விருப்ப மனுவை தாக்கல் செய்திருந்தனர்.  அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல், ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இதையடுத்து, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர்.

ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்யவும், சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் தருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
Tags:    

Similar News