செய்திகள்
கேஎஸ் அழகிரி

3-வது அணி மீது நம்பிக்கையில்லை- கேஎஸ் அழகிரி

Published On 2021-03-04 16:28 GMT   |   Update On 2021-03-04 16:28 GMT
தேர்தல் கூட்டணி தொடர்பாக யாருடனும் நாங்கள் பேச வில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக பேசியதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, எங்களுக்கு 3- வது அணி மீது நம்பிக்கையில்லை, தேர்தல் கூட்டணி தொடர்பாக யாருடனும் நாங்கள் பேசவில்லை என்றார்.

தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு திமுகவிடம் இருந்து அழைப்பு வரவில்லை. தேர்தல் விதிகள் எதையும் ராகுல் காந்தி மீறவில்லை, பாஜக கட்சி அப்படிதான் செயல்படும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறினார்.
Tags:    

Similar News