லைஃப்ஸ்டைல்
தேங்காய் பால் சேர்த்த மசாலா ரசம்

தேங்காய் பால் சேர்த்த மசாலா ரசம்

Published On 2021-05-29 09:37 GMT   |   Update On 2021-05-29 09:37 GMT
நீங்கள் ரசப் பிரியராக இருந்தால், வித்தியாசமான சுவையுடைய ரசங்களை செய்து சுவைக்க விரும்புபவராக இருந்தால், தேங்காய் பால் சேர்த்த மசாலா ரசம் செய்து சுவையுங்கள். இதை சூப் போன்றும் குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 8-10
தக்காளி - 2 (பெரியது)
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 4
துருவிய தேங்காய் - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு...

கிராம்பு - 5
பட்டை - 1 இன்ச்
அன்னாசிப்பூ - 2
சோம்பு - சிறிது

செய்முறை:

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு, தக்காளி மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, தக்காளியை மென்மையாக வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். பின் தக்காளியின் தோலை நீக்கிவிட்டு, தக்காளியை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து தேங்காயை போட்டு அரைத்து, அதிலிருந்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் அன்னாசிப்பூ சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

இந்நிலையில் அரைத்த பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் தக்காளி வேக வைத்த நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5-6 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

இப்போது கொத்தமல்லி மற்றும் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான தஞ்சாவூர் ஸ்டைல் மசாலா ரசம் தயார்.
Tags:    

Similar News